sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அஞ்செட்டி வனத்தில் பெண் யானை பலி

/

அஞ்செட்டி வனத்தில் பெண் யானை பலி

அஞ்செட்டி வனத்தில் பெண் யானை பலி

அஞ்செட்டி வனத்தில் பெண் யானை பலி


ADDED : ஜூன் 01, 2025 01:17 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், அஞ்செட்டியை தொடர்ந்து, உரிகம் வனச்சரகத்தில் ஒரு பெண் யானை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பனை காப்புக்காட்டில் உள்ள உச்சகான் குட்டையில் கடந்த, 27 ம் தேதி, 7 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது. அச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், உரிகம் வனச்சரகத்தில் நேற்று அழுகிய நிலையில், 14 வயது மதிக்கத்தக்க பெண் யானை சடலம் மீட்கப்பட்டுள்ளது. யானை சடலம் பாதிக்கு மேல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடல்நிலை பாதித்து,

இயற்கையான முறையில் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.

அடுத்தடுத்து இரு பெண் யானைகள் பலியானது, விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. யானை இறந்தது குறித்து வனத்துறையினர் உரிய தகவலை அளிக்காமல் மறைக்கவே முயன்றனர். உயிரிழந்த யானையின் புகைப்படத்தை கூட வெளியிட தயக்கம் காட்டினர். யானைகள் அடுத்தடுத்து இறந்து வரும் நிலையில், வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us