sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மோசமான நிலையில் தார்ச்சாலை நாற்று நடும் போராட்டம் நடத்திய மக்கள்

/

மோசமான நிலையில் தார்ச்சாலை நாற்று நடும் போராட்டம் நடத்திய மக்கள்

மோசமான நிலையில் தார்ச்சாலை நாற்று நடும் போராட்டம் நடத்திய மக்கள்

மோசமான நிலையில் தார்ச்சாலை நாற்று நடும் போராட்டம் நடத்திய மக்கள்


ADDED : மே 24, 2025 01:58 AM

Google News

ADDED : மே 24, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராயல் சிட்டி, சிலிகான்சிட்டி லே அவுட்டுகளில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அதிகாரிகளிடம் மக்கள் மனு கொடுத்த நிலையில், இப்பகுதி ஓசூர் மாநகராட்சியுடன் இணைய உள்ளதால், அதன் பின் தான் தார்ச்சாலை வசதி செய்யப்படும் என கூறியுள்ளனர்.

இதற்கிடையே, இப்

பகுதி மக்கள் அலசநத்தம் பிரதான தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை, கெலவரப்பள்ளி பஞ்., நிர்வாகம் அமைத்து தர வேண்டும்.

லே அவுட்டுகளுக்குள் பேரண்டப்பள்ளி பஞ்., நிர்வாகமும், அதற்கு வெளியே கெலவரப்பள்ளி பஞ்., நிர்வாகம் சாலைகள் அமைக்க வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ்கள் கூட, அவசரத்திற்கு வர முடியாத நிலை உள்ளது.

இதனால் ஆத்திர

மடைந்த, 70க்கும் மேற்பட்ட மக்கள், சாலையில் தண்ணீர் ஊற்றி நேற்று காலை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'சாலை அமைத்து தராவிட்டால், வரும் தேர்தலில் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, மக்கள் கோஷங்களை எழுப்பினர். ஹட்கோ போலீசார் மற்றும் ஓசூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், விஜயா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சாலையோரம் உள்ள பள்ளத்தில் மக்கள் தவறி விழாமல் இருக்க கல்வெட்டு அமைப்பதாகவும் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us