sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு பயணம்: தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

/

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு பயணம்: தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு பயணம்: தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு பயணம்: தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜன 27, 2024 03:53 PM

Google News

ADDED : ஜன 27, 2024 03:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தொடர் விடுமுறையால் கர்நாடகா வாழ் தமிழர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், தமிழக எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கர்நாடகா மாநிலத்தில், தமிழக மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்; குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கர்நாடகா வாழ் தமிழர்கள், தங்களது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் மாலை முதல் புறப்பட்டு சென்று வருகின்றனர்.

சிலர் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி பெற்று சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதனால், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட்டில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியை தாண்டி, 3 கி.மீ., துாரத்திற்கு மேல், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஜூஜூவாடி அருகே சிப்காட் ஜங்ஷன் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடப்பதால், வழக்கத்தை விட நேற்று அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.--






      Dinamalar
      Follow us