sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது

/

5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது

5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது

5 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநிலத்தவர் இருவர் கைது


ADDED : செப் 23, 2025 01:30 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு மற்றும் போலீசார், கொத்தகொண்டப்பள்ளி அருகே டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த வட மாநில வாலிபரை பிடித்து விசாரித்த போது, பீஹார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார், 20, என்பதும், கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரிந்தது. அவரிடம் இரு கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

அதனால், பவன்குமார் அறைக்கு சென்று போலீசார் சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா சிக்கியது. அவருக்கு யார் சப்ளை செய்தது என கேட்ட போது, கொத்தகொண்டப்பள்ளியில் தங்கியுள்ள பீஹார் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்தாஸ், 45, என்பவர் விற்றது தெரியவந்தது. அவரது அறைக்கு சென்ற போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us