ADDED : ஜூலை 26, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். துணை பொதுசெயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினர். 'தொடக்ககல்வித் துறையில் அரசாணை 243 ஆல் 90 சதவீதம் ஆசிரியைகள் பதவி உயர்வு வாய்ப்பு இழந்துள்ளனர். இதை கண்டித்து சென்னையில் ஜூலை 29 - 31 வரை நடக்கும் முற்றுகை போராட்டம் 2வது நாளில் மதுரை நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் எமிமாள் ஞானசெல்வி நன்றி கூறினார்.