sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு

/

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு

3


ADDED : ஜூன் 25, 2024 06:25 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:25 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : ''கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்'' என உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.

மதுரை மாவட்டம்மேலுாரில்முல்லை பெரியாறு அணையை பென்னிகுவிக் உருவாக்கியது குறித்து நீரதிகாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தக இலக்கிய விழாவில் நீதிபதி சுரேஷ்குமார்பேசியதாவது:தமிழக கிராமப்புற இளைஞர்கள் சோம்பேறிகளாக, குடிமகன்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம். நுாறு நாள் வேலை திட்டத்தின் மூலம் இளைஞர்கள் சோம்பேறிகளாக மாறுவதோடு சம்பளத்தை டாஸ்மாக்கில் கொடுத்து குடிமகன்களாக மாறி விடுகின்றனர்.

இந்நிலை மாற பள்ளி, கல்லுாரிகளில் இருந்து நமது பண்பாடு வீரம், வரலாறு, தெரிந்துக்கொள்ள வேண்டும். வரலாற்றை சொல்லக்கூடிய தார்மீக கடமையும், பொறுப்பும் எழுத்தாளருக்கு உண்டு. வரலாற்று படைப்பு தான் நீரதிகார புத்தகம். 9 ஆண்டுகள் போராடி கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை. அணைபற்றியும், அணையின் வரலாறு பற்றியும் புத்தகத்தில் எழுத்தாளர் வெண்ணிலா தெளிவாக எழுதியுள்ளார்.

லண்டன், சென்னை ஆவண காப்பகங்களில் இருந்து கிடைத்த ஆவணங்களை கொண்டு இப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவதற்காக அணையை கட்டியவர் கர்னல் பென்னிகுவிக். அணை குறித்த வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த புத்தகம் தான் நீரதிகாரம்என்றார். பேச்சாளர் பாரதி பாஸ்கர்,விஜயா பதிப்பகம் வேலாயுதம், துருவம் குழுமத்தின் நிறுவனர் ப்ரீத்திஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us