sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் சகாயம்

/

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் சகாயம்

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் சகாயம்

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் சகாயம்


ADDED : ஜூன் 07, 2025 06:52 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிரானைட் குவாரி விதிமீறல் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் தனக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

விக்கிரமங்கலத்தில் ஒரு கிரானைட் குவாரி விதிமீறல் தொடர்பாக 2013 ல் வழக்கு பதியப்பட்டது. கனிமவள குற்ற வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அப்போதைய கலெக்டர் சகாயம் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். சகாயம் ஆஜராக நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியது. அவர்,'கிரானைட் குவாரி விதிமீறலில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், எனக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. எனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலையில் உள்ளேன்,' என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார்.மே 5 ல் சிறப்பு நீதிமன்ற விசாரணையின்போது சகாயம் ஆஜராகவில்லை. அரசு தரப்பு,'சகாயம் சம்மனை பெறவில்லை. அவருக்கு பாதுகாப்பு அளிக்கத் தயார்,' என தெரிவித்தது.நீதிபதி: சகாயத்திற்கு புதிதாக சம்மன் அனுப்பப்படுகிறது. அவர் காணொலி மூலம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 6 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

நேற்று மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி(கூடுதல் பொறுப்பு) செங்கமலச்செல்வன் விசாரித்தார்.

சகாயம்,'நீதிமன்றத்தில் ஆஜராகும்போது மட்டும் போலீஸ் பாதுகாப்பு போதாது. எனக்கு கொலை மிரட்டல் வருவதால் நிரந்தரமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும்,' என எழுதிய கடிதத்தை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 'ஜூலை 2 ல் சகாயம் ஆஜராக வேண்டும்,' என நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us