ADDED : மே 25, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : உசிலம்பட்டி - எழுமலை ரோட்டில் ஜோதில்நாயக்கனுார் விலக்கருகே பஸ்சில் இருந்து மூடைகளுடன் இறங்கிய தாடையம்பட்டி செல்வம் 50, மேட்டுப்பட்டி பால்பாண்டியை 29, டி.எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் சோதனையிட்டதில் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஆந்திராவில் வாங்கி ரயில் மூலம் மதுரைக்கும், மதுரையிலிருந்து பஸ் மூலம் ஜோதில்நாயக்கனுார் பகுதிக்கும் விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டனர்.