sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்

/

வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்

வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்

வானரங்களைப் பிடித்து வனத்தில் விடுங்க சார்


ADDED : செப் 15, 2025 03:58 AM

Google News

ADDED : செப் 15, 2025 03:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுாரில் வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை துாக்கிச் செல்லும் குரங்குகள், விரட்டுவோரை கடிப்பதால் மக்கள் அச்சமுடன் உள்ளனர்.

மேலுார் நகராட்சி திருவள்ளுவர் தெரு, பேங்க் ரோடு உள்பட பிரதானபகுதியில் பெரும்பாலும் கடைகள், அலுவலகங்கள் உள்ளன. வீடுகளும் நெருக்கமாக உள்ளன. இப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளும் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. வீடு, கடைகளின் கதவை திறந்தாலே உள்ளே புகுந்து, உணவுப்பொருட்களை பை, பாத்திரங்களுடன் துாக்கி பாய்ந்து செல்கின்றன. ும், குழந்தைகளிடம் இருந்து பால் பாட்டிலை பிடுங்கி சென்றதும் உண்டு.

தடுக்க வருவோரை முறைத்து விரட்டி கடிக்கின்றன. பூட்டிய வீட்டுக்குள்ளும் ஜன்னல் பகுதியில் கிடைத்த சிறிய துவாரங்கள் வழியாக குட்டிக் குரங்குகள் புகுந்து ஆட்டம் போடுகின்றன. பொருட்களை உடைத்து வீணாக்குகின்றன. சி.சி.டி.வி., கேமரா கேபிள், இன்டர்நெட், மின் ஒயர்களில் தொங்கி ஆட்டம் போடுவதால் அவை சேதமடைகிறது. அதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.

கடைக்காரர்கள் வியாபாரத்தை கவனிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். வனத்துறை அதிகாரிகள் வானரங்களை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us