sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் சிக்கிய தந்தை மகனுக்கு கலெக்டர் உதவி

/

விபத்தில் சிக்கிய தந்தை மகனுக்கு கலெக்டர் உதவி

விபத்தில் சிக்கிய தந்தை மகனுக்கு கலெக்டர் உதவி

விபத்தில் சிக்கிய தந்தை மகனுக்கு கலெக்டர் உதவி


ADDED : ஜூன் 28, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:திருமங்கலம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் 50. மகன் பாலாஜி 15. இவர் திருமங் கலத்தில் 10ம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சென்றனர். கிழவனேரி அருகே எதிரே வந்த வேன், இருசக்கர வாகனத்தில் மோதியது. இருவரும் பலத்த காயமடைந்து ரோட்டில் கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதேநேரம் சேடப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய மதுரையின் புதிய கலெக்டர் பிரவீன்குமார் காரில் சென்றார். சம்பவ இடத்தில் காரை நிறுத்தி இறங்கினார். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார்.

தன்னுடன் வந்த திட்ட அலுவலரின் காரில் ஏற்றி திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பியவர், மருத்துவமனையை உடனே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர்களை அனுப்பிய பின்பே ஆய்வுப் பணிக்கான பயணத்தைத் தொடர்ந்தார்.

கலெக்டரின் மனிதநேயத்தை அப்பகுதியினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us