/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்திரப்பதிவுக்கான சர்வர் பாதிப்பு
/
பத்திரப்பதிவுக்கான சர்வர் பாதிப்பு
ADDED : மே 27, 2025 01:09 AM
மதுரை: மதுரை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் சர்வர் பாதிப்பால் நேற்று காலை பதிவு செய்யும் பணி பாதிக்கப்பட்டது. பதிவு செய்ய வந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதள இணைப்பு கிடைப்பதில் பிரச்னை இல்லை. தினமும் காலை 10:00 மணிக்கு 'மந்திரா டிவைஸ்' மூலம் சார்பதிவாளர்கள் 'பையோமெட்ரிக்' முறையில் கைரேகையை பதிவு செய்து பணியை துவக்குவர். அந்த டிவைஸில் பத்திரம் பதிவு செய்ய வருவோரின் கைரேகையை ஆதாருடன் சரிபார்த்து, ரேகை பதிவு செய்யப்படும்.
நேற்று காலை 10:00 மணிக்கு மாநிலம் முழுவதும் 'மந்திரா டிவைஸ்,'சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சென்னை தலைமை அலுவலகத்தில் முறையிட்டோம். மதியம் 12:30 மணிக்கு சரிசெய்யப்பட்டது. வழக்கம்போல் பத்திரப் பதிவு நடந்தது என்றார்.