ADDED : ஜூன் 28, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்:மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி சார்பில் புதிய மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட அமைப்பாளர் கிருத்திகா தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன் ஆலோசனை வழங்கினார்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, பேரையூர், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, ஏழுமலை, சேடப்பட்டி பகுதிகளில் புதிதாக பொறுப்பேற்ற மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் தங்கபாண்டி, தனபால் கலந்து கொண்டனர்.