sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பா.ஜ.,வின் டில்லி 'பஞ்சாயத்து' அ.தி.மு.க.,வுக்கு 'டபுள் மைனஸ்' காங்., எம்.பி., கார்த்தி பேட்டி

/

பா.ஜ.,வின் டில்லி 'பஞ்சாயத்து' அ.தி.மு.க.,வுக்கு 'டபுள் மைனஸ்' காங்., எம்.பி., கார்த்தி பேட்டி

பா.ஜ.,வின் டில்லி 'பஞ்சாயத்து' அ.தி.மு.க.,வுக்கு 'டபுள் மைனஸ்' காங்., எம்.பி., கார்த்தி பேட்டி

பா.ஜ.,வின் டில்லி 'பஞ்சாயத்து' அ.தி.மு.க.,வுக்கு 'டபுள் மைனஸ்' காங்., எம்.பி., கார்த்தி பேட்டி


ADDED : செப் 16, 2025 05:52 AM

Google News

ADDED : செப் 16, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்ததும், பெரிய கட்சியாக இருந்தும் 'பஞ்சாயத்து' என்ற பெயரில் அதன் தலைவர்கள் டில்லிக்கு அழைக்கப்படுவதும் அக்கட்சிக்கு 'டபுள் மைனஸ்' என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவு இருப்பதை ஏற்கிறேன். யார் கட்சி தொடங்கினாலும் ஆளுங்கட்சியை எதிர்த்து பேசுவது இயல்பு. எந்த ஒரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை ஆராய்ந்த போது தி.மு.க., ஆட்சியில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறை சொல்லி விட முடியாது.

தமிழகத்தில் அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சியாக இருந்தும் பா.ஜ.,வுக்கு துணை கட்சி போல் உள்ளது. ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. ஒற்றுமையாக இல்லாததால் பஞ்சாயத்து என்றால் அக்கட்சி தலைவர்கள் டில்லிக்கு அழைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பா.ஜ.,வுடனான கூட்டணியும், டில்லிக்கு தலைவர்கள் சென்றுவருவதும் அக்கட்சிக்கு 'டபுள் மைனஸ்'.

விஜய் ரசிகர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர். அவர்கள் மாறும்போது அந்த கட்சிகளுக்கு சேதாரம் ஏற்படும். கூட்டணி ஆட்சி குறித்து கேட்கிறீர்கள், 1967 முதல் அந்த ஏக்கம் காங்.,க்கு உள்ளது. 2006 ல் அந்த வாய்ப்பு வந்த போது பயன்படுத்திக் கொள்ளவில்லை. மீண்டும் வாய்ப்பு வந்தால் காங்., பயன்படுத்திக்கொள்ளும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us