/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
/
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 17, 2024 07:03 AM
மதுரை : மதுரையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளதாவது:
ராமாயணம் பல மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஹிந்து கடவுள் ராமனின் வாழ்க்கை தமிழில் கம்பரால் எழுதப்பட்ட ராமாயணம் ஆன்மிகத்தையும், தமிழ் மொழியையம் வளர்த்துள்ளது.
நாடு முழுவதும் ராமனின் வாழ்க்கை தொடர்புடைய தலங்கள் உள்ளன. ராமனின் பெயரை கோடிக்கணக்கான மக்கள் வைத்துள்ளனர். பல யுகங்களாக மக்களுடன் வாழ்ந்து வரும் அவருக்கு, அவர் பிறந்த அயோத்தியில் மீண்டும் ஒரு கோயில் எழுப்பியுள்ளது மக்களுக்கு பெரும் பாக்கியம் என நாடே உணர்ந்துள்ளது.
எனவே ஜன.,22 ல் நடக்கும் ராமர் கோயில் கும்பாபி ேஷகம் விழாவை பக்தர்கள் தரிசிக்க அனைத்து கோயில்களிலும் காணொளி மூலம் ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

