sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

/

தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஜன 10, 2024 06:33 AM

Google News

ADDED : ஜன 10, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

விவசாயிகள் பேசியதாவது: வெள்ளலுார் மாயாண்டி கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கீழவளவு, சருகுவலையபட்டி, பூஞ்சுத்தியில் கண்மாய்க்கான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறை பராமரிக்காததால் தாலுகா முழுவதும் கண்மாய்கள் வறண்டுள்ளன. ஷட்டர்களை பராமரிக்காததால் தண்ணீர் வீணாகிறது.

இந்நிலை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏற்கனவே டிச.,19 முதல் 30 நாட்களுக்கு முழுமையாகவும், 60 நாட்களுக்கு முறை வைத்தும் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தொடர்ந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மேலும் ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்.தற்போது வரும் தண்ணீரை கண்மாய்களில் சேமிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். தவிர மாற்றுப்பயிர்கள் பயிரிடுவது குறித்து வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மானியத்தில் உளுந்து, எள் விதைகள் வழங்க வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் மணி, கிருஷ்ணன், பாண்டி, கதிரேசன், சிதம்பரம் சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us