/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூழ்கிய கப்பலிலிருந்து வெளியேறியபிளாஸ்டிக் துகள்களை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
மூழ்கிய கப்பலிலிருந்து வெளியேறியபிளாஸ்டிக் துகள்களை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மூழ்கிய கப்பலிலிருந்து வெளியேறியபிளாஸ்டிக் துகள்களை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மூழ்கிய கப்பலிலிருந்து வெளியேறியபிளாஸ்டிக் துகள்களை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூன் 18, 2025 06:47 AM
மதுரை: கேரளா கடலில் மூழ்கிய வெளிநாட்டு சரக்கு கப்பல் கன்டெய்னர்களிலிருந்து வெளியேறிய பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்ட கடலில் தேங்கியுள்ளதை அகற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குளச்சல் அந்தோணி முத்து உட்பட 4 பேர் தாக்கல் செய்த பொதுநல மனு:லிபேரியா நாட்டின் சரக்கு கப்பல் கேரளா கொச்சி அருகே அரபிக் கடலில் மே 24 ல் மூழ்கியது.
அதிலிருந்த கன்டெய்னர்கள் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. அதில் கால்சியம் கார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இதனால் கன்னியாகுமரி கடல் பகுதி மாசடைகிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.ஆபத்தான பொருட்கள் கடல் நீரில் மிதப்பதால், மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு கன்னியாகுமரி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரச்னையின் தன்மையை கருதி இதை மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அம்மாவட்ட கடல் பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலர், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.