sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது

/

'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது

'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது

'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது


ADDED : ஜூன் 28, 2025 04:45 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாத்துார் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் 42. இவர் சிக்கன் வகைகள், பீட்சா, பர்கர், ஐஸ்கிரீம் போன்ற பேக்கரி தயாரிப்புகளுக்கான பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் வைத்துள்ளார். இவரிடம் மாநிலம் முழுவதிலும் பலர் கொள்முதல் செய்கின்றனர்.

மதுரை கே.கே.நகரில் ஓட்டல், பேக்கரி நடத்தும் மதுரை நாகனாகுளம் பெஞ்சமினும் 2021 முதல் கொள்முதல் செய்தார். அவரது மனைவி எலீஸ்பா 45 கொடுக்கும் ஆர்டர்களுக்கும் தொடர்ந்து பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது.

அதற்கான தொகையை இருவரும் 'ஜி பே' மூலம் செலுத்தினர். அதற்கு ஆதாரமாக பணம் அனுப்பிய 'ஸ்கிரீன் ஷாட்'களை, குமாரின் ஏஜன்ஸி அலைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரும் பணம் வரவு வைக்கப்பட்டதாக நினைத்தார்.

அவரது வங்கி கணக்கில் ஆய்வு செய்தபோது, பெஞ்சமின், அவரது மனைவி அலைபேசிகளில் இருந்து அனுப்பிய பணத்திற்கான 'ஸ்கிரீன் ஷாட் ' போலி எனவும், எடிட் செய்து அனுப்பி வைக்கப்பட்டவை என்றும் தெரிந்தது. இதன்மூலம் அவர்கள் ரூ. 27 லட்சத்து 57 ஆயிரம் மோசடி செய்தது தெரிந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து கணவன், மனைவியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us