sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெடுஞ்சாலைத்துறையில் பதவி உயர்வு இளநிலை பொறியாளர் வேதனை

/

நெடுஞ்சாலைத்துறையில் பதவி உயர்வு இளநிலை பொறியாளர் வேதனை

நெடுஞ்சாலைத்துறையில் பதவி உயர்வு இளநிலை பொறியாளர் வேதனை

நெடுஞ்சாலைத்துறையில் பதவி உயர்வு இளநிலை பொறியாளர் வேதனை


ADDED : செப் 25, 2025 03:48 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பதவி உயர்வு வழங்குவதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக' இளநிலை பொறியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரைவு அலுவலராக இருந்து 2018 ல் இளநிலை பொறியாளராக பதவி உயர்வு பெற்றோர் கடந்த 7 ஆண்டுகளாக பணிவரன் முறை செய்யப்படாமல் உள்ளது. இதற்காக முதன்மை இயக்குனரை தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லாததால் மாநில அளவில் நேற்று பணியின்போது ஒருநாள் கறுப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநில துணைத்தலைவர் முருகன் கூறியதாவது: நெடுஞ்சாலைத் துறையில் மேற்கண்ட பணிவரன் முறை நடக்காததால், பல்வேறு இழப்புகளை சந்திக்கிறோம்.

இதுமட்டுமின்றி மேலும் சில கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. உதவிப் பொறியாளர் பணி நியமனம் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் 75 சதவீதம், இளநிலை பொறியாளர்கள் பதவி உயர்வாக 25 சதவீதம் (3:1 விகிதத்தில்) இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இதனை மொத்த பணியிடத்தில் கணக்கிடாமல் ஆண்டுதோறும் நியமனத்தில் கணக்கிடுவதால் பாதிக்கப்படுகிறோம்.

மேற்கண்ட 25 சதவீதத்தில் ஒரு பணியிடம் நேரடி நியமனமாக ஒதுக்கப்பட (டி.என்.பி.எஸ்.சி.,) வேண்டும். இவ்வகையில் 60 பணியிடங்கள் 2007 முதல் நியமிக்கப்படாமல் உள்ளது. எங்களுக்கான அடுத்த நிலை பதவி உயர்வு உதவி கோட்டப் பொறியாளர் பணியிடம். இதற்கு இளநிலை வரைவு அலுவலர், இளநிலை பொறியாளர் என இரண்டிலும் மொத்த சர்வீஸ் 10 ஆண்டுகள் இருந்தால் போதும். ஆனால் 2018 க்கு பின்னர் இளநிலை பொறியாளராக மட்டுமே 10 ஆண்டு பணி முடித்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதனால் எங்களில் ஒருவர்கூட உதவி கோட்டப் பொறியாளர் பணிக்கு வர இயலவில்லை. அனைவரும் அதற்குள் ஓய்வு பெற்று விடுகின்றனர்.

இந்த உதவி கோட்டப் பொறியாளர் பணிநியமனத்தின் போதும் எங்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. அதன்படி இதுவரை 800 பணியிடம் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் 22 பணியிடங்களே ஒதுக்கி உள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

இது முறையற்ற செயல். இதனால் நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சென்னை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us