நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே முடுவார்பட்டி வேலவன் சுவாமி கோயிலில் 48ம் நாள் மண்டலாபிஷேகம் நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு புனித நீர் ஊற்றினர்.
பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

