/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லஞ்ச வழக்கில் அங்கித்திவாரிக்கு ஜாமின் அனுமதிக்க ஆட்சேபம்
/
லஞ்ச வழக்கில் அங்கித்திவாரிக்கு ஜாமின் அனுமதிக்க ஆட்சேபம்
லஞ்ச வழக்கில் அங்கித்திவாரிக்கு ஜாமின் அனுமதிக்க ஆட்சேபம்
லஞ்ச வழக்கில் அங்கித்திவாரிக்கு ஜாமின் அனுமதிக்க ஆட்சேபம்
ADDED : பிப் 24, 2024 05:01 AM
மதுரை : திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு ஜாமின் அனுமதிக்க அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018 ல் வழக்கு பதிந்தனர். மதுரை அமலாக்கத்துறை இயக்குனரக தென் மண்டல துணை இயக்குனர் அலுவலக அதிகாரி அங்கித்திவாரி அலைபேசியில், ''சொத்து குவிப்பு தொடர்பாக உங்களுக்கு எதிராக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்,'' என சுரேஷ்பாபுவிடம் தெரிவித்தார். வழக்கை முடிக்க அங்கித்திவாரி ரூ.50 லட்சம் பேரம் பேசினார். இதற்காக சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித்திவாரியை 2023 டிச.,1ல் திண்டுக்கல் லஞ்ச போலீசார் கைது செய்தனர்.
அவர்,''கைதாகி 60 நாட்களுக்கு மேலாகிறது. போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி விவேக்குமார் சிங் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அங்கு மார்ச் 11 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது. நீதிபதி மார்ச் 12 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.