sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பல்கலையில் பேராசிரியர்கள் தர்ணா

/

பல்கலையில் பேராசிரியர்கள் தர்ணா

பல்கலையில் பேராசிரியர்கள் தர்ணா

பல்கலையில் பேராசிரியர்கள் தர்ணா


ADDED : ஜூன் 19, 2025 02:51 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பதவி உயர்வு (சி,ஏ.எஸ்.,) வழங்க கோரி பதிவாளர் அறை முன் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவி உயர்வு மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பதவி உயர்வுகளுக்கான ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து பல்கலை பேராசிரியர் நலச் சங்கம் (மூபா) சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மூபா அவசர கூட்டம் நேற்று நடந்தது. அதில் பதிவாளர் அறை முன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதியம் 2:00 மணி வரை பதிவாளர் அறைமுன் தரையில் அமர்ந்து பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மூபா பொதுச் செயலாளர் முனியாண்டி கூறுகையில், பலமுறை கோரிக்கை விடுத்தும் சிண்டிகேட் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர், நிதிக் குழுக்களில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. பதிவாளரும் முரணான பதில்களை அளித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

இதுகுறித்து சென்னையில் உயர்கல்வி அதிகாரிகளை பல்கலை குழு சந்தித்து குறைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us