sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

54 அடி உயர சிவலிங்கம் வடிவ கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

/

54 அடி உயர சிவலிங்கம் வடிவ கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

54 அடி உயர சிவலிங்கம் வடிவ கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

54 அடி உயர சிவலிங்கம் வடிவ கோவிலில் மஹா கும்பாபிஷேகம்


ADDED : மே 12, 2025 06:37 AM

Google News

ADDED : மே 12, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில், 54 அடி உயரம் உள்ள சிவலிங்க வடிவிலான கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, பெருஞ்சேரி கிராமத்தில், தாருகா வனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது.

புராண காலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து, ஆடையாக உடுத்தி கொண்டதாக வழுவூர் தல புராணம் தெரிவிக்கிறது.

இத்தகைய சிறப்புடைய கோவில் அருகே உள்ள பெருஞ்சேரி கிராமத்தில், 54 அடி உயரம் கொண்ட சிவலிங்க வடிவிலான கோவிலும், உட்புறம் ஒரே கல்லில் செய்யப்பட்ட 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. சித்தர் பீட நிறுவன தலைவர் கருணாகரன் முன்னிலையிலும், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ரஷ்யா, கனடா, கஜகஸ்தான், ஜெர்மன் நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us