/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கடலில் குளித்த வாலிபர் உள்ளிட்ட 2 பேர் பலி நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் நடந்த சோகம்
/
கடலில் குளித்த வாலிபர் உள்ளிட்ட 2 பேர் பலி நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் நடந்த சோகம்
கடலில் குளித்த வாலிபர் உள்ளிட்ட 2 பேர் பலி நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் நடந்த சோகம்
கடலில் குளித்த வாலிபர் உள்ளிட்ட 2 பேர் பலி நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் நடந்த சோகம்
ADDED : ஜன 27, 2024 02:38 AM
மயிலாடுதுறை:தரங்கம்பாடிக்கு சுற்றுலா வந்த நிச்சயம் முடிந்த வாலிபர் உள்ளிட்ட 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இளம்பெண் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வீரபத்திரர் கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் நவீன்குமார் .23; செக்கடி தெருவை சேர்ந்த குமார் மகள் நிவேதா.19; இவர் அரசு பெண்கள் கல்லுாரியில் 3ம் ஆண்டு பி.காம் படித்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த உறவினர்கள் உள்ளிட்ட 25 பேர் நேற்று மதியம் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நவீன்குமார், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயண தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் 6ம் வகுப்பு மாணவர் சரவணன்.12; . ஆகிய 3 பேரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைக் கண்டு உறவினர்கள் சத்தம் போட்டு நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அலையில் சிக்கிய 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் நவீன்குமார், சரவணன் ஆகிய 2 பேரும் கடலில் மூழ்கியதில் இறந்தது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நிவேதாவை போலீசார் பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து தரங்கம்பாடி போலீசார் மற்றும் பொறையார் சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த முடிந்த நிலையில் வாலிபர் உள்ளிட்ட இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

