sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

நீலாயதாட்சியம்மன் கோவிலில் புதிய தேருக்கு பூமி பூஜை

/

நீலாயதாட்சியம்மன் கோவிலில் புதிய தேருக்கு பூமி பூஜை

நீலாயதாட்சியம்மன் கோவிலில் புதிய தேருக்கு பூமி பூஜை

நீலாயதாட்சியம்மன் கோவிலில் புதிய தேருக்கு பூமி பூஜை


ADDED : ஜன 25, 2024 10:29 PM

Google News

ADDED : ஜன 25, 2024 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்,:நாகை, நீலாயதாட்சி உடனுறை காயாரோகணேஸ்வரர் கோவிலில் புதிய தேருக்கான பூமி பூஜை நடந்தது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றில் முதன்மை பெற்றதும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சமய குறவர்களால் பாடல் பெற்றதும், சிவராஜதானி ஷேத்திரம் என்றழைக்கப்படும் பழமையானது நாகை, நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணேஸ்வரர் கோவில்.

இக்கோவிலில் சுந்தர விடங்கர் தேர் கமிட்டி, ஓலை சப்ர கமிட்டி முயற்சியில், ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில், 16 அடி உயரம், 12 அடி அகலத்தில், உபயதாரர் பங்களிப்பில், நுாதன தியாகராஜா திருத்தேர் செய்யப்பட உள்ளது.

இதற்கான நிர்மான திருப்பணி முகூர்த்தம் மற்றும் பூமி பூஜை, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us