sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

ரஜத கிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் பங்கேற்பு

/

ரஜத கிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் பங்கேற்பு

ரஜத கிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் பங்கேற்பு

ரஜத கிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் பங்கேற்பு


ADDED : செப் 12, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணியில் பழமையான ரஜத கிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், 16 வகையான பூஜை பொருட்களை, முஸ்லிம்கள் சீர்வரிசையாக எடுத்து வந்து பங்கேற்றனர்.

நாகை அடுத்த வேளாங்கண்ணியில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பிரஹந்நாயகி உடனுறை ரஜத கிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின், கடந்த 9ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

நேற்று, யாகசாலை பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடாகி, ரஜத நீலகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, வேளாங்கண்ணி முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள், அம்மனுக்கு பட்டுப்புடவை மற்றும் பூஜைகளுக்கு தேவையான 16 வகையான மங்களப் பொருட்களை சீர்வரிசையாக, ஊர்வலமாக எடுத்து வந்து பங்கேற்றனர்.

மேலும், ஆரோக்கியமாதா தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையிலான பாதிரியார்கள், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என திராளானவர்கள் பங்கேற்றது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us