sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு

/

கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு


ADDED : ஜூன் 06, 2025 02:56 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்,:நாகையில் நடந்த அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேக விழாவில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், நாகை நம்பியார் நகரில் அவதரித்தவர். அவருக்கு அங்கு புதிதாக கற்கோவில் கட்டப்பட்டது. அங்கு, புதிய ஒளி மாரியம்மன் கோவில், கப்பல் விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டது. இக்கோவில்கள் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக தினமான நேற்று காங்., தேசிய சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் மீரா உசேன் தலைமையில், 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அங்குள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து 51 தாம்பூல தட்டுகளில் மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்புகளை சீர்வரிசையாக எடுத்து சென்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முஸ்லிம்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us