/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
பரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது
/
பரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது
ADDED : ஜூன் 26, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்:நாகை அருகே சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் நுார்முகமது,31, அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், 7 ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி சென்ற சிறுமி, பள்ளி தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாகை மகளிர் போலீசார், திட்டச்சேரியை சேர்ந்த பரோட்ட மாஸ்டர் நூர்முகமது,31, என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.