sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

பணம் கேட்டு மிரட்டிய போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

/

பணம் கேட்டு மிரட்டிய போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பணம் கேட்டு மிரட்டிய போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பணம் கேட்டு மிரட்டிய போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : ஜன 26, 2024 02:28 AM

Google News

ADDED : ஜன 26, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:தமிழகம் - புதுச்சேரி மாநில எல்லையான நாகை மாவட்டம் வாஞ்சூரில் உள்ள சோதனை சாவடியில், நாகை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.

நேற்று முன்தினம் இரவு, நாகை, டவுன் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜோதிமணி, வலிவலம் பாலமுருகன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

அப்போது வாஞ்சூரில் இருந்து நாகைக்கு வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி இருவர் மது அருந்தி விட்டு, மது பாட்டில்களை இடுப்பில் சொருகி மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இரண்டு போலீஸ்காரர்களும் அவர்களை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்ததாக எஸ்.பி., ஹர்ஷ் சிங்கிற்கு தகவல் கிடைத்தது.

சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்த எஸ்.பி., ஹர்ஷ் சிங், இரு போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us