sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

/

70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

70 லட்சம் தொழிலாளர்களின் கணினி தரவுகளை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 17, 2024 09:10 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று இந்திய தொழிற்சங்க மையம், சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது.

மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்-கொடி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, பொருளாளர் ரங்கசாமி, துணை செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். மாநில துணைத்த-லைவர் சிங்காரவேலு சிறப்புரையாற்றினார். முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த, 70 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் செயலி முழுமையாக செயல்படும் வரை, நேரடி-யாக மனுக்கள் பெறுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாவட்ட அலுவலகங்களில் தேங்கியுள்ள அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீ-லனை முடித்து உரிய காலத்தில் பணப்பயன்கள் வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை பெறுவதை காரணம் காட்டி, நலவாரிய ஓய்வூதி-யத்தை நிராகரிக்க கூடாது என்பன உள்பட பல்-வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us