/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.4 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.1.4 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : ஜூலை 21, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 397.150 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 400 ரூபாய்க்கும் குறைந்தபட்சம், 339 ரூபாய்க்கும் விற்பனையானது. 397.150 கிலோ பட்டுக்கூடு, 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக, 353.47 ரூபாய்க்கு விற்பனையானது.