sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெடுஞ்சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளித்தவர் சிக்கினார்

/

நெடுஞ்சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளித்தவர் சிக்கினார்

நெடுஞ்சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளித்தவர் சிக்கினார்

நெடுஞ்சாலையில் 'ஸ்கேட்டிங்' பயிற்சி அளித்தவர் சிக்கினார்


ADDED : ஜூன் 19, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலம் பாலாஜி நகரை சேர்ந்த 'ஸ்கேட்டிங்' பயிற்சியாளர் பிரபாகரன், 29. இவர், சேலம் கன்னங்குறிச்சியில், ஸ்கேட்டிங் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், 13 சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தார். அதை சிறுவர்களின் பெற்றோர், வீடியோ எடுத்து பகிர்ந்தனர். ஆபத்தான நெடுஞ்சாலையில் சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பயிற்சியாளர் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதையடுத்து, நேற்று மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில், பயிற்சியாளர், சிறுவர்களின் பெற்றோரிடம் பேசிய சேலம் புறநகர் டி.எஸ்.பி., அமலஆட்வின் கூறியதாவது:

கடந்த ஐந்து மாதங்களில் இந்த நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நெடுஞ்சாலையில், ஸ்கேட்டிங் பயிற்சி அளித்ததும், சிறுவர்களை அனுப்பி வைத்ததும் குற்றமே.

அவர்களுடன், பெற்றோர்களாகிய நீங்கள் இரு சக்கர வாகனத்தில் 'ஹெல்மெட்' போடாமல் சென்றுள்ளீர்கள். மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றால் பெருமை தான். ஆனால், முதலில் பாதுகாப்பு தான் முக்கியம்.

பயிற்சியாளர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us