sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதிய பாரத எழுத்தறிவு தேர்வில் 12,889 பேர் பங்கேற்பு

/

புதிய பாரத எழுத்தறிவு தேர்வில் 12,889 பேர் பங்கேற்பு

புதிய பாரத எழுத்தறிவு தேர்வில் 12,889 பேர் பங்கேற்பு

புதிய பாரத எழுத்தறிவு தேர்வில் 12,889 பேர் பங்கேற்பு


ADDED : ஜூன் 16, 2025 07:33 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' 2022-23ம் ஆண்டு முதல், 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் கல்வியாண்டில், பயிற்சி அளிக்கப்பட்டு வரும், 12,889 கற்போர்களுக்கு, 901 மையங்களில், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான தேர்வு நேற்று நடந்தது.

காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு மையங்களில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, காவேட்டிப்பட்டி, பெரியப்பட்டி தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.மேலும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், விரிவுரையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் அனைத்து மையங்களையும் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us