/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சதுர்த்தியை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம்
/
சதுர்த்தியை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம்
ADDED : பிப் 24, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: மாசி மாத சதுர்த்தி நட்சத்திரத்தையொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று காலை, 8:00 மணிக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு சிவகாம சுந்தரி நடராஜர் பெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம், 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அடியார் பெருமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.