/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெருமாள் சிலையுடன் பஜனை: போலீசார் தடையால் அதிருப்தி
/
பெருமாள் சிலையுடன் பஜனை: போலீசார் தடையால் அதிருப்தி
பெருமாள் சிலையுடன் பஜனை: போலீசார் தடையால் அதிருப்தி
பெருமாள் சிலையுடன் பஜனை: போலீசார் தடையால் அதிருப்தி
ADDED : ஜன 17, 2024 11:47 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டியில், பெருமாள் சிலை ஊர்வலத்துடன் பஜனைக்கு போலீசார் தடை விதித்ததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மார்கழி மாத பஜனை, பூஜைகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு பஜனை, மார்கழி மாத முதல் தேதியில் தொடங்கியது. அப்போது குறிப்பிட்ட சிலர், மார்கழி பூஜையை தடுத்து நிறுத்தினர். அதனால் பாரம்பரியமாக நடக்கும் பஜனை பூஜைகள் தடைபட்டன. கடந்தப்பட்டி ஊர் நாட்டாமைக்காரர் கோவிந்தராசு தரப்பினர், புதுச்சத்திரம் போலீசார், வருவாய் துறையினரிடம் பூஜைகளை தடுத்த குறிப்பிட்ட சிலர் மீது புகார் அளித்தனர். அவர்கள் விசாரணை நடத்திய நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், 30 நாட்களாக பஜனை, பூஜைகள் நடத்த முடியவில்லை.
மார்கழி மாதம் முடிந்த பிறகு, தை மாதத்தில் பஜனை ஊர்வலம், தொடர்ந்து பெருமாள் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். பெருமாள் சிலையுடன் நடக்கும் பஜனை ஊர்வலத்திற்கும் புதுச்சத்திரம் போலீசார் தடை விதித்தனர். பாரம்பரிய முறைப்படி, கோவில் சப்பரத்தில் சுவாமி சிலைகளை வைத்து, அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று, சுவாமி திருக்கல்யாணம், பஜனை பூஜைகள் நடத்தப்படும்.
இந்த முறை பிரச்னை ஏற்பட்டதால், சுவாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல முடியாமல், குழந்தைகளை கொண்டு ராமர் பட்டாபிஷேக புகைப்படத்தை ஊர்வலமாக எடுத்து சென்று பஜனை பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன், முத்துக்குமரன், காமாட்சியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் ஆகியவை
வழங்கப்பட்டது.

