sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்

/

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 17, 2024 11:47 AM

Google News

ADDED : ஜன 17, 2024 11:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், 'கருப்பு பொங்கல்' வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், மோகனுார் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், பொங்கல் நாளான நேற்று முன்தினம், வளையப்பட்டி சிப்காட் அலுவலக வளாகத்தில், கருப்பு பொங்கல் வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது, சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கொங்கு வேளாளர் பேரவை மாநில தலைவர் தேவராஜன், நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க., செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட விவசாய பிரிவு அமைப்பாளர் ரவிச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி மாநில செயலாளர் ராதிகா, சிப்காட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் ராம்குமார், ரவிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us