sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கன்டெய்னர் லாரி மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

/

கன்டெய்னர் லாரி மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

கன்டெய்னர் லாரி மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

கன்டெய்னர் லாரி மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு


ADDED : ஜூன் 16, 2025 07:32 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, 'கூரியர் பார்சல்' ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி திருச்சியை நோக்கி, நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் மோகன், 23 ஓட்டினார்.

ராசிபுரம் அருகே, ஆண்டகளூர்கேட் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மோகன் துாக்க கலக்கத்தில் இருந்துள்ளார்.

இதனால், கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, எதிர் திசையில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கன்டெய்னர் லாரி டிரைவர் மோகன், 23, மாற்று டிரைவரான திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த குணசேகரன் மகன் ராம்பிரசாத், 35, 'லிப்ட்' கேட்டு வந்த முசிறி மணல் மேட்டை சேர்ந்த அன்பழகன் மகன் அஜித், 38, மற்றும் நாமக்கலில் இருந்து வந்த லாரி டிரைவரான, புதுச்சத்திரம் கண்ணுார் பட்டியை சேர்ந்த மணி மகன் வேலுச்சாமி, 40, அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் சரவணன் உள்ளிட்ட, ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். இதில் நேற்று முன்தினமே லாரி டிரைவர் வேலுசாமி பலியானார்.இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மாற்று டிரைவர் ராம்பிரசாத், நேற்று காலை இறந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை, 2 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us