/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலி
/
திருச்செங்கோடு அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலி
திருச்செங்கோடு அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலி
திருச்செங்கோடு அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலி
ADDED : மே 23, 2025 02:02 AM
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 46, விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி, 42. இவர்களது மகள் ராஜேஸ்வரி, 24. இவரது உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை, 5:00 மணியளவில் மூன்று பேரும் ஒரே பைக்கில், திருச்செங்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.
வட்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற எஸ்.எம்.பி.எஸ்., மற்றும் எம்.ஆர்.என்., என்ற இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டு, ஒன்றை ஒன்று முந்தி செல்ல வேகமாக வந்தன. அப்போது எம்.ஆர்.என்., பஸ், எதிரே சாலை ஓரத்தில் வந்து கொண்டிருந்த பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் சண்முகம், ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து விழுந்தனர். ராஜலட்சுமியை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
சண்முகம் தலையில் பலத்த காயமடைந்ததால், மிக ஆபத்தான நிலையில், திருச்செங்கோடு இளையாம்பாளையம் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜேஸ்வரி, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து, மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

