sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்

/

மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்

மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்

மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்


ADDED : செப் 05, 2025 01:15 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த பச்சுடையாம்பாளையத்தில், மயானத்திற்கு தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் ஒரு சில பிரிவினருக்கு, பேளுக்குறிச்சி சாலையில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் சடலத்தை எரிக்கும்போது, மண்ணை குழப்பி விறகு மேல் பூசி மூடிவிடுவர். மேலும் இறுதி சடங்கு செய்ய வசதியாக இப்பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துள்ளனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தண்ணீர் வினியோகம் செய்யும் ஆழ்துளை கிணறு வறண்டுவிட்டது. இதனால், தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை. தகன மேடைக்கு வருபவர்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மீண்டும் சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் எடுத்து விட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us