sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாளை இலவச தொழிற்பயிற்சி பெண்களுக்கு நேர்முகத்தேர்வு

/

நாளை இலவச தொழிற்பயிற்சி பெண்களுக்கு நேர்முகத்தேர்வு

நாளை இலவச தொழிற்பயிற்சி பெண்களுக்கு நேர்முகத்தேர்வு

நாளை இலவச தொழிற்பயிற்சி பெண்களுக்கு நேர்முகத்தேர்வு


ADDED : மே 14, 2025 02:00 AM

Google News

ADDED : மே 14, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்,மத்திய அரசின், தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சியை வழங்க உள்ளது.

இதில், 18 வயதுக்கு மேற்பட்ட, 45 வயதுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. துணி, சணல் பொருட்களிலிருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்கான ஒருமாத கால இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், 8825812528, 9597491158 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us