/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
/
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
ADDED : செப் 27, 2025 01:20 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு புதிய கடன் வழங்கும் முகாம் நடந்தது.மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், நேற்று சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார், வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், புதிய கடன் உதவி வழங்குதல், ஏற்கனவே கடன் செலுத்தப்பட்ட வியாபாரிகளுக்கு, இரண்டாம்கட்ட தவணை தொகை வழங்குதல், தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை முறையாக எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பேசி, வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வங்கி முகவர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

