/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாசிலா அருவி; சுற்றுலா பயன்பாட்டிற்கு திறப்பு
/
மாசிலா அருவி; சுற்றுலா பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஜன 26, 2024 10:28 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், மூலிகைகள் அடங்கிய புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து, 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, எட்டிக்கையம்மன் கோவில், மாசி பெரியண்ணன் கோவில், அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சீக்குப்பாறை வியூபாயின்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
அரியூர் நாடு பஞ்., பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. வனத்துறை சார்பில் மாசிலா அருவியில் சுற்றுலா பயணிகள் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கு மேலிருந்து கொட்டும் அருவியின் நடுவே தடுப்பு சுவர் அமைத்து இட வசதி ஏற்படுத்தி உள்ளனர். அருவியின் வளாகத்தில் சிறுவர் பூங்கா, உடை மாற்றும் அறைகள், நடைபாதை சீரமைத்து, சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகளை வனத்துறையினர் செய்துள்ளனர். பராமரிப்பு பணி முடிந்து, நேற்று முன்தினம் கலெக்டர் உமா மாசிலா அருவியை திறந்து வைத்தார். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

