sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி நிலுவை தொகை வழங்கல்

/

மோகனுார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி நிலுவை தொகை வழங்கல்

மோகனுார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி நிலுவை தொகை வழங்கல்

மோகனுார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.23.47 கோடி நிலுவை தொகை வழங்கல்


ADDED : மே 26, 2025 04:18 AM

Google News

ADDED : மே 26, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவைப்பருவதில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, நிலுவை தொகை, 23.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கரும்புக்கான பணம் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

நீண்ட நாட்களாக கடும் சிரமத்துடன் இருந்து வந்த விவசாயிகள், ஆலை நிர்வாகத்-திடம் கரும்புக்கான பணத்தை வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும், பல்வேறு அமைப்பினர், விவசாய சங்கத்தினரும், தமி-ழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்-திரன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர், தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து, 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்-தொகை, 23.47 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விரைந்து வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கரும்பு நிலுவை தொகை சம்பந்தப்-பட்ட வங்கிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. கரும்பு நிலுவை தொகையை வழங்க முயற்சி மேற்கொண்ட அமைச்சர்க-ளுக்கும் பணத்தை வழங்க விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு, விவசாயி

கள் சங்கங்கள் பாராட்டி உள்ளன.






      Dinamalar
      Follow us