sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப பிரச்னையால் தற்கொலை

/

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப பிரச்னையால் தற்கொலை

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப பிரச்னையால் தற்கொலை

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப பிரச்னையால் தற்கொலை


ADDED : செப் 12, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் போதுப்பட்டி சிவசக்திநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கீதா, 24, இவர்கள் இருவரும், இரு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு, 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

மோகன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து பெரும்பாலான நாட்கள் இரவு தாமதமாக வருவது வழக்கம். இதனால் கணவன் ,- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வந்து உள்ளார். மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனம் உடைந்த கீதா அறையை உள்புறமாக பூட்டி, மின்விசிறியில் துாக்குப்போட்டு கொண்டார்.

மோகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். * அதேபோல், நாமக்கல்-திருச்சி சாலை ஆண்டவர்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரதீப்,19; கட்டிட தொழிலாளி. இவர் திருச்சியை சேர்ந்த திரிஷா என்பவரை காதலித்து வந்தார். இதற்கிடையே, 4 மாதங்களுக்கு முன் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, நண்பர்கள் உதவியுடன் திரிஷாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சின்னவேப்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் இரவு கணவன்-, மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனம் உடைந்த பிரதீப், துாக்குப்போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர், பிரதீப்பை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பிரதீப் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்தும் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us