/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் சஷ்டி சிறப்பு வழிபாடு
/
நாமக்கல் மாவட்டத்தில் சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 17, 2024 11:45 AM
நாமக்கல்: தை மாத சஷ்டியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நாமக்கல்-மோகனுார் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் தை மாதம் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, நேற்று காலை கணபதி பூஜை, சுப்ரமணியர் ஹோமம், பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபி ேஷகம், வெள்ளிக்கவச அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
-* ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு ஷஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம்
செய்தனர்.
* சேந்தமங்கலம், தத்தகிரி முருகன் கோவிலில், முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபி ேஷகங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. சந்தன காப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். சேந்தமங்கலம், காந்திபுரம், முத்துகாபட்டி, நாமக்கல், அக்கியம்பட்டி, பொட்டணம், மின்னாம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்று, முருகனை வழிபட்டனர்.

