/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.42 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
/
ரூ.42 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
ADDED : மே 28, 2025 01:06 AM
நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டையில், நேற்று நடந்த ஏலத்தில், 42 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது.நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தையில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 10,002 ரூபாய், அதிகபட்சம், 15,169 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 9,002 ரூபாய், அதிகபட்சம், 13,059 ரூபாய்; பனங்காலி, 18,999 ரூபாயிலிருந்து, 30,455 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 380, உருண்டை, 170, பனங்காலி, 14 என, 564 மூட்டை மஞ்சள், 42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

