sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குதிரையை தீ மிதிக்க வைத்த வாலிபர் கைது

/

குதிரையை தீ மிதிக்க வைத்த வாலிபர் கைது

குதிரையை தீ மிதிக்க வைத்த வாலிபர் கைது

குதிரையை தீ மிதிக்க வைத்த வாலிபர் கைது


ADDED : மே 27, 2025 01:42 AM

Google News

ADDED : மே 27, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கிழக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், சில மாதங்களுக்கு முன் நடந்தது. மண்டல பூஜை முடிந்து, கடந்த மே மாதம், 7ல் திருவிழா நடந்தது. இதில், தீ மிதிக்கும் நிகழ்ச்சியில், அண்ணா காலனியை சேர்ந்த சின்ராஜ் மகன் குமரவேல், 38, என்பவர், தன் குதிரையை தீ மிதிக்க வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, சமூக மற்றும் விலங்கு நல ஆர்வலர் விக்னேஷ் அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குதிரையை பரிசோதனை செய்தபோது காயம் ஏற்படவில்லை எனத்தெரிந்தது. இருப்பினும் விலங்குகள் வதைச்சட்டதின் கீழ், குமரவேலை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us