sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை துரத்தியதில் தப்பி ஓடிய நான்கு தொழிலாளர்கள் காயம்

/

யானை துரத்தியதில் தப்பி ஓடிய நான்கு தொழிலாளர்கள் காயம்

யானை துரத்தியதில் தப்பி ஓடிய நான்கு தொழிலாளர்கள் காயம்

யானை துரத்தியதில் தப்பி ஓடிய நான்கு தொழிலாளர்கள் காயம்


ADDED : ஜூன் 05, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே யானை துரத்தியதில், 4 தொழிலாளிகள் காயம் அடைந்தனர்.

பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியை ஒட்டி, சேரங்கோடு டான்டீ தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. வனப்பகுதியாக மாறிய இந்த பகுதியில் யானைகள் மற்றும் சிறுத்தை முகாமிட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை இங்குள்ள எஸ்டேட் பகுதிக்கு தேயிலை பறிப்பதற்காக பெண் தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த யானை ஒன்று, தொழிலாளர்களை துரத்தி உள்ளது. யானையிடமிருந்து தப்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புகுந்து ஓடி உள்ளனர். சக தொழிலாளர்கள் சப்தம் எழுப்பி யானையை வேறு பக்கம் துரத்தியுள்ளனர். அதில், பெண் தொழிலாளர்கள் மோலி,55, வள்ளியம்மாள்,57, வித்யா,47, சீதாதேவி,40, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, லேசான காயங்களுடன் இருந்த வித்யா மற்றும் சீதாதேவி ஆகியோர் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். தொழிலாளர்களை யானை துரத்திய சம்பவம், சக தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us