/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காற்றுடன் கனமழை மரம் விழுந்து வீடு சேதம்
/
காற்றுடன் கனமழை மரம் விழுந்து வீடு சேதம்
ADDED : ஜூலை 09, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு;பாலக்காடு அருகே, காற்றுடன் பெய்த கனமழையால் மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கிழக்கஞ்சேரி பகுதியில் நேற்று காலை காற்றுடன் கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்து அப்பகுதியை சேர்ந்த ரதீஷ் என்பவரின் வீடு சேதமடைந்தது.
வீட்டில் இருந்தவர்கள், மரம் விழும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மரம் விழுந்ததில், மூன்று மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் தடைப்பட்டது.
தகவல் அறிந்து வந்த, மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை புனரமைத்து, மின் சப்ளை கொடுத்தனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டது.