ADDED : ஜூலை 10, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார், - மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள், கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இதையடுத்து, 8ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், 12ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பத்தாவது நாளாக, நேற்றும் அன்னுார் கோர்ட்டில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.