sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்

/

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்


ADDED : செப் 11, 2025 09:18 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர்.

பந்தலுார் அருகே உப்பட்டி எம்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் முதல்வர் கவிதாவிற்கு ஆசிரியர் தினத்தன்று, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்று திரும்பிய முதல்வருக்கு, பள்ளி நிர்வாகம், ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டி மற்றும் பள்ளிவாசல் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பந்தலுாரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, பின்னர் உப்பட்டியில், செண்டை மேளம் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உப்பட்டி கோவில் கமிட்டி சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் பள்ளி துணை முதல்வர் ருக்மணி வரவேற்றார். பள்ளி தாளாளர் டாக்டர் அன்வர் தலைமை வகித்தார்.

நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, முன்னாள் எம். எல். ஏ. திராவிடமணி, உட்பட பலர் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி சேர்மன் ஆலி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us